Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஹெமிஸ்பியர் பிராப்பர்ட்டீஸ் இந்தியா நிறுவனத்தில் கூடுதல் பங்குகளை இணைப்பதற்கும் டாடா தகவல் தொடர்பு நிறுவனத்தின் உபரி நிலத்தை இந்த அமைப்புக்கு மாற்றித்தருவதற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல்.


  

ஹெமிஸ்பியர் பிராப்பர்ட்டீஸ் இந்தியா நிறுவனத்தின் (எச்பிஐஎல்) நிர்வாக கட்டுப்பாட்டை தொலைத்தொடர்பு துறையிலிருந்து வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்திற்கு மாற்றித்தரும் திட்டத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியது. இந்த நிறுவனத்தில் ரூ.700 கோடி பங்குகளையும் மற்றும் ரூ.51 கோடி பாதுகாப்புடன் கூடிய இந்திய அரசின் கடனையும் இணைத்தபிறகு இந்த நிர்வாக கட்டுப்பாட்டு மாற்றத்தை செய்வது என்ற திட்டத்திற்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. உபரி நிலத்தை பிரிக்கும் திட்டத்திற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

விபரங்கள் :

  1. ஹெமிஸ்பியர் பிராப்பர்ட்டீஸ் இந்தியா நிறுவனத்தில் ரூ.700 கோடி மதிப்பிலான பங்குகளை சேர்த்து அந்த நிறுவனம் ரூ.10 மதிப்புள்ள 70 கோடி ஒன்றாக சேர்ந்த திரும்பி வாங்கிக் கொள்ளக்கூடிய முன்னுரிமை பங்குகளை வாங்கிக் கொள்வதற்கு வகை செய்யப்பட்டுள்ளது. மேலும் ரூ.51 கோடியை இந்திய அரசின் பிணைக்கடன் மூலம் பெற்று அதற்கான வரியை பொருளாதார விவகாரங்கள் துறை நிர்ணயித்த அளவில் செலுத்துவதற்கும் இது வகை செய்கிறது.
  2. எச்பிஐஎல் நிறுவனத்திற்கு நிலம் கட்டடம் வர்த்தகம் புரிவதில் அன்னிய நேரடி முதலீடு தொடர்பான மத்திய அரசின் கொள்கையிலிருந்து விலக்கு அளிப்பது.
  3. எச்பிஐஎல் நிறுவனத்திற்கு தனது இணைப்பு ஒப்பந்தத்தின் நோக்கமான விற்பனை, நீண்டகால குத்தகை, நிலத்தை விற்றுவிடுதல் போன்றவை சார்ந்த முடிவுக்கு அதிகாரமளித்தல்.
  4. எச்பிஐஎல் நிறுவனத்தின் பங்கு பரிமாற்றம் மற்றும் மேலாண்மை கட்டுப்பாடு ஆகியவற்றை தொலைத்தொடர்புத் துறையிலிருந்து வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்திற்கு மாற்றித்தருதல்.
  5. எச்பிஐஎல் நிறுவனத்தின் பங்குகளை தொலைத்தொடர்பு அமைச்சகத்திலிருந்து வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகத்திற்கு மாற்றித்தரும்போது ஏற்படக்கூடிய பங்குகள் இணைத்தல் மற்றும் திட்ட ஏற்பாடு அமலாக்கம் ஆகியவற்றை மேற்கொள்ள தொலைத்தொடர்புத்துறைக்கு அதிகாரம் அளித்தல்.

 

பயன்கள் :

டாடா தொலைத்தொடர்பு நிறுவனத்தின் (டிசிஎல்) உபரி நிலங்களை பிரித்து எச்பிஐஎல் நிறுவனத்திற்கு வழங்கி அதன் செயல்பாட்டை மேலும் எளிமையானதாக செய்தல்.

அமலாக்க அணுகுமுறை மற்றும் இலக்குகள் :

அமைச்சரவையின் ஒப்புதல் இந்த்த் திட்டத்திற்கு கிடைத்தவுடன் டிசிஎல் நிறுவனத்தின் உபரி நிலத்தை எச்பிஐஎல் நிறுவனத்திற்கு முத்திரைத் தீர்வையை செலுத்தி மாற்றித்தரப்படும். டிசிஎல் நிறுவனம் அறிவித்தபடி 7 முதல் 8 மாதங்களுக்குள் ஏற்பாட்டு திட்ட அனுமதி தேவைப்படும். இந்த காலத்திற்குள் தேசிய கம்பெனி சட்ட நடுவர் மன்ற அனுமதி கிடைத்தபிறகு 4 அல்லது 5 மாத காலத்திற்குள் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகள் அமலாக்கப்படும். மொத்தத்தில் இந்த முடிவை செயல்படுத்த சுமார் ஓராண்டு காலம் பிடிக்கும்.

பின்னணி :

விதேஷ் சஞ்சார் நிகம் (தற்போது டாடா தொலைத்தொடர்பு நிறுவனம்) மத்திய அரசினால் 2002 பிப்ரவரி 13ம் தேதி பங்கு விற்பனைக்கு உட்படுத்தப்பட்டது. இந்த நிறுவனத்தின் மேலாண்மை கட்டுப்பாடு முக்கிய பங்காளியான டாடா குழுமத்தின் சிறப்பு நோக்க நிதியமான பானாடோன் பின்வெஸ்ட் நிறுவனத்திற்கு மாற்றித்தரப்பட்டது.

பங்கு விற்பனையின்போது புனே, கொல்கத்தா, புதுதில்லி, சென்னை ஆகிய நகரங்களில் 5 இடங்களில் உள்ள 773.13 ஏக்கர் நிலம் உபரி என காணப்பட்டு வரையறை செய்யப்பட்டு பங்கு விற்பனை திட்டத்தில் சேர்க்கப்படமாட்டாது என முடிவு செய்யப்பட்டது.

பங்கு உரிமை / பங்கு கொள்முதல் உடன்பாட்டின்படி பானாடோன் பின்வெஸ்ட் நிறுவனம் உபரி நிலத்தை பிரித்துக் கொடுக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டது. இந்த நிலம் 1956 கம்பெனிகள் சட்டத்தின் 391 முதல் 394 வரையிலான பிரிவுகளின்படி வீடு நிலம் கம்பெனியாக மாற்றப்பட்டது.