பிரதமர் திரு.நரேந்திர மோடி, ஸ்ரீ சமஸ்தான் கோகரன் பார்த்தகலி ஜீவோட்டம் மடத்தின் மேன்மைமிகு ஸ்ரீமத் வித்யாதிராஜ் தீர்த் ஸ்ரீபத் வடர் சுவாமிஜி அவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில், ”ஸ்ரீ சமஸ்தான் கோகரன் பார்த்தகலி ஜீவோட்டம் மடத்தின் மேன்மைமிகு ஸ்ரீமத் வித்யாதிராஜ் தீர்த் ஸ்ரீபத் வடர் சுவாமிஜி அவர்களின் மறைவை அறிந்து துயருற்றேன். சமுதாயத்திற்கு, குறிப்பாக நல்வாழ்வு தொடர்பாக அவர் ஆற்றிய பரந்துபட்ட சேவைக்காக அவர் என்றும் நினைவு கூரப்படுவார். அவரது சீடர்களுக்கு இரங்கல்கள். ஓம் சாந்தி” என்று கூறியுள்ளார்.
***
Saddened by the demise of H.H. Shrimad Vidyadhiraj Teerth Sripad Vader Swamiji of the Shree Samsthan Gokarn Partagali Jeevottam Math. He will be remembered for his extensive service to society, particularly in healthcare. Condolences to his countless followers. Om Shanti.
— Narendra Modi (@narendramodi) July 19, 2021