ஷில்லாங் சேம்பர் சேர்ந்திசைக் குழுவை உருவாக்கியவரும் நடத்தியருவமான திரு நீல் நாங்கின்ரிஹ் மறைவுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
ட்விட்டரில், பிரதமர் கூறியிருப்பதாவது:
“உலக அளவில் ரசிகர்களைக் குவித்துள்ள தலைசிறந்த ஷில்லாங் சேம்பர் சேர்ந்திசைக் குழுவை உருவாக்கியவர் திரு நீல் நாங்கின்ரிஹ் அவர்களின் வியத்தகு நிகழ்ச்சிகளை நானும் பார்த்திருக்கிறேன். அவர் வெகுவிரைவிலேயே நம்மைவிட்டுப் பிரிந்துவிட்டார். அவரது படைப்பாக்கம் எப்போதும் நினைவுகூரப்படும். அவரது குடும்பத்தினருக்கும் அவரை நேசிப்பவர்களுக்கும் இரங்கல்கள். அவரது ஆன்மா சாந்தியடைவதாக”.
Mr. Neil Nongkynrih was an outstanding mentor to the Shillong Chamber Choir, which enthralled audiences globally. I have also witnessed some of their superb performances. He left us too soon. His creativity will always be remembered. Condolences to his family and admirers. RIP.
— Narendra Modi (@narendramodi) January 5, 2022