பஞ்சாபில் முக்ட்சார் ஃபரீத்கோட், பெரோஸ்பூர் ஆகிய இடங்களில் தண்ணீர் தேங்குவதை தடுக்க இந்த இரட்டைத் திட்டங்கள் உதவும்
பஞ்சாபில் உள்ள ராஜஸ்தான் பாசனக் கால்வாய் மற்றும் சிர்ஹிந்த் பாசனக் கால்வாய் ஆகியவற்றின் கரைகளை சீரமைக்க முறையே ரூ.620.42 கோடி, ரூ. 205.758 கோடி மத்திய அரசு நிதியுதவி வழங்க பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதனை அமல்படுத்த ஐந்தாண்டுகளாகும் (2018-19 , 2022-23)
பயன்:
செலவு:
பின்னணி:
சிர்ஹிந்த் மற்றும் ராஜஸ்தான் கால்வாய்கள் தொடங்கும் ஹரிக் பகுதியிலிருந்து மேல்நோக்கிச் சென்று ராஜஸ்தானுக்குள் செல்வதற்குமுன் பஞ்சாப் வழியாக பாய்ந்துச் செல்கிறது. இந்த இரட்டைக் கால்வாய்கள் பொதுவான நீர்பிடிப்பு பகுதியை கொண்டுள்ளன. பஞ்சாபிலும், ராஜஸ்தானிலும் பாசன பகுதிக்குள் தண்ணீர் செல்வதற்கான கால்வாய்களின் கரைகள் 1960-களில் கட்டப்பட்டன.
சிர்ஹிந்த் மற்றும் ராஜஸ்தான் பாசனக் கால்வாய்களின் கரைகளில் உடைப்புகள் ஏற்பட்டதால், கணிசமான தண்ணீர் கசிவால் இழப்பு ஏற்படுவதாக பஞ்சாப் அரசு தெரிவித்தது. இதன் விளைவாக இந்த கால்வாய்களில் நீரோட்டம் குறைக்கப்பட்டதோடு, அதன் அருகேயுள்ள பகுதிகளில் தண்ணீர் தேங்கியதன் காரணமாக பெருமளவு வேளாண் இழப்புகள் ஏற்பட்டன.
தற்போதைய திட்டத்தால், தண்ணீர் தேங்கும் பிரச்சனைக்கு தீர்வு ஏற்படுவதோடு, இந்த இரண்டு கால்வாய்களில் தண்ணீர் இருப்பும், நீரோட்டமும் அதிகரிக்கும்.