Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

போர்ட் பிளேயரில் மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டதன் 75-வது ஆண்டை முன்னிட்டு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸை பிரதமர் நினைவு கூர்ந்துள்ளார்


போர்ட் பிளேயரில் மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டதன் 75-வது ஆண்டு தினத்தை முன்னிட்டு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸை பிரதமர் திரு நரேந்திர மோடி நினைவு கூர்ந்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள சுட்டுரைச் செய்தியில்,

டிசம்பர் 30, 1943… போர்ட் பிளேயரில் வீரமிக்க நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மூவர்ணக் கொடியை ஏற்றிய இந்நாள், ஒவ்வொரு இந்தியரின் நினைவிலும் நீங்கா இடம் பெற்றுள்ளது. இந்த சிறப்பு தினத்தின் 75-வது ஆண்டை முன்னிட்டு போர்ட் பிளேயர் கென்று மூவர்ணக் கொடியை ஏற்றும் கௌரவம் எனக்குக் கிடைத்தது. சில நினைவுகளை பகிர்ந்து கொள்கிறேன்”, என்று தெரிவித்துள்ளார்

 

——