பெல்ஜியம் பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள திரு பார்ட் டி வெவருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியா-பெல்ஜியம் இடையேயான உறவுகளை மேலும் வலுப்படுத்தவும், உலகளாவிய விவகாரங்களில் ஒத்துழைப்பை மேம்படுத்தவும் இணைந்து பணியாற்றுவோம் என்று திரு மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளப்பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:
“பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள பார்ட் டி வெவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்தியா-பெல்ஜியம் இடையேயான உறவுகளை மேலும் வலுப்படுத்தவும், உலகளாவிய விவகாரங்களில் நமது ஒத்துழைப்பை மேம்படுத்தவும் இணைந்து பணியாற்றுவதை நான் எதிர்நோக்குகிறேன். உங்கள் பதவிக்காலம் வெற்றிகரமாக அமைய வாழ்த்துக்கள்.”
***
(Release ID: 2099368)
TS/IR/RR/KR
Heartiest congratulations to Prime Minister @Bart_DeWever on assuming office. I look forward to working together to further strengthen India-Belgium ties and enhance our collaboration on global matters. Wishing you a successful tenure ahead.
— Narendra Modi (@narendramodi) February 4, 2025