Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு பிரதமர் மரியாதை


2019-ம் ஆண்டு புல்வாமாவில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் வீரமரணம் அடைந்த இந்திய வீரர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளப்பதிவில் அவர் கூறியிருப்பதாவது:

“2019-ல் புல்வாமாவில் நாம் இழந்த துணிச்சலான வீரர்களுக்கு மரியாதை செலுத்துகிறேன். வருங்கால தலைமுறையினர் அவர்களின் தியாகத்தையும், தேசத்திற்கான அவர்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பையும் ஒருபோதும் மறக்க மாட்டார்கள்.”

***

(Release ID: 2103026)
VL/GK/RR/KR