Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

புதுதில்லியில் நாளை (2025 பிப்ரவரி 28) ஜஹான்-இ-குஸ்ருவ் நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்கிறார்


புதுதில்லியில் உள்ள சுந்தர் நர்சரியில் நாளை (பிப்ரவரி 28)  இரவு 7:30 மணியளவில் மாபெரும் சூஃபி இசை விழாவான ஜஹான்-இ-குஸ்ரு 2025-ல் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்கிறார்.

நாட்டின் பன்முகக் கலை மற்றும் கலாச்சாரத்தை ஊக்குவிப்பதில் பிரதமர் வலுவான ஆதரவாளராக இருந்து வருகிறார். அதற்கு ஏற்ப, சூஃபி இசை, கவிதை மற்றும் நடனத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட சர்வதேச விழாவான ஜஹான்-இ-குஸ்ருவில் அவர் பங்கேற்கிறார். அமீர் குஸ்ருவின் மரபைக் கொண்டாட இது உலகெங்கிலும் உள்ள கலைஞர்களை ஒன்றிணைக்கிறது. ரூமி அறக்கட்டளையால் 2001 –ம் ஆண்டில் பிரபல திரைப்படத் தயாரிப்பாளரும், கலைஞருமான முசாபர் அலியால் தொடங்கப்பட்ட இந்த விழா இந்த ஆண்டு அதன் 25-வது ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறது. இது பிப்ரவரி 28 அன்று தொடங்கி மார்ச் 2 வரை நடைபெறும்.

இந்த விழாவின் போது, பிரதமர் டி.இ.எச் பஜாரையும் பார்வையிடுவார். இதில் ஒரு மாவட்டம்-ஒரு தயாரிப்பு கைவினைப் பொருட்கள் மற்றும் நாடு முழுவதிலுமிருந்து பல்வேறு நேர்த்தியான கலைப்பொருட்கள், கைவினைப் பொருட்கள் மற்றும் கைத்தறி குறித்த  குறும்படங்கள் போன்றவை இடம்பெறும்.

***

TS/IR/AG/DL