Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரதம மந்திரி கிராமப்புற வீட்டுவசதித் திட்டத்தை மார்ச் 2024 வரை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்


பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், மத்திய ஊரக வளர்ச்சித் துறையின் கருத்துருவான பிரதம மந்திரி கிராமப்புற வீட்டுவசதி திட்டத்தை (பிஎம்ஏஒய்-ஜி) 2021 மார்ச்சுக்கு பின்னர் 2024 மார்ச் வரை தொடர்ந்து செயல்படுத்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் முடிக்கப்பட வேண்டிய 2.95 கோடி வீடுகள் இலக்கை எட்டுவதற்கு ஏற்றவகையில் இத்திட்டம் நீட்டிக்கப்படுகிறது. எஞ்சிய 155.75 லட்சம் வீடுகளை கட்டி முடிக்க ரூ.2,17,257 கோடி தேவை. இதில் மத்திய அரசின் பங்கு ரூ.1,25,106 கோடி, மாநில அரசின் பங்கு ரூ.73,475 கோடி.

அனைத்து கிராமப்புற பகுதிகளிலும் வீட்டுவசதியை உறுதி செய்ய இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

மேலும் கூடுதல் விவரங்களுக்கு ஆங்கில செய்திக் குறிப்பை பார்க்கவும் http://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1779325

                             ******

(Release ID: 1779325)