Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரதமருடன் இலங்கையில் வசிக்கும் இந்திய வம்சாவளி தமிழ் தலைவர்கள் சந்திப்பு


இலங்கையைச் சேர்ந்த இந்திய வம்சாவளி தமிழ் தலைவர்கள் பிரதமர் திரு. நரேந்திர மோடியை கொழும்பில் சந்தித்தனர். இலங்கை அரசின் ஒத்துழைப்புடன் 10,000 வீடுகள், சுகாதார வசதிகள், புனித தளமான சீதா எலியா ஆலயம் மற்றும் பிற சமூக மேம்பாட்டுத் திட்டங்களுக்கு இந்தியா ஆதரவளிக்கும் என்று திரு மோடி அறிவித்தார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில்  அவர் கூறியதாவது:

இந்திய வம்சாவளி தமிழ் தலைவர்களுடனான சந்திப்பு பயனுள்ளதாக இருந்தது. இந்த சமூகம் 200 ஆண்டுகளுக்கும் மேலாக இரு நாடுகளுக்கும் இடையே ஒரு வாழும் பாலமாக திகழ்கிறது. இலங்கை அரசின் ஒத்துழைப்புடன் 10,000 வீடுகள், சுகாதார வசதிகள், புனித தளமான சீதா எலியா ஆலயம் மற்றும் பிற சமூக மேம்பாட்டுத் திட்டங்களுக்கு இந்தியா ஆதரவளிக்கும்.”

***

(Release ID: 2119404)

RB/RJ