Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பாலி மொழியில் திரிபிடகம் பிரதியை வழங்கியதற்காக தாய்லாந்து பிரதமருக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார்

பாலி மொழியில் திரிபிடகம் பிரதியை வழங்கியதற்காக தாய்லாந்து பிரதமருக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார்


பாலி மொழியில் திரிபிடகம் பிரதியை வழங்கியதற்காக தாய்லாந்து பிரதமர் திருமதி பாய்டோங்டார்ன் ஷினவத்ராவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார். அழகிய மொழியில் பகவான் புத்தரது போதனைகளின் சாரத்தை இது கொண்டிருப்பதாக அவர் பாராட்டு தெரிவித்தார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் எழுதியிருப்பதாவது:

வெகு சிறப்பான வெளிப்பாடு!

பாலி மொழியில் திரிபிடகம் பிரதியை வழங்கியதற்காக தாய்லாந்து பிரதமர் திருமதி பாய்டோங்டார்ன் ஷினவத்ராவுக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன்.  உண்மையில் மிக அழகான பாலி மொழி, பகவான் புத்தரது போதனைகளின் சாரத்தை தனக்குள் கொண்டுள்ளது. நீங்கள் அனைவரும் அறிந்திருப்பது போல் பாலி மொழிக்கு கடந்த ஆண்டு செம்மொழி அந்தஸ்தை எங்கள் அரசு வழங்கியது. இந்த முடிவை உலகம் முழுவதும் உள்ள மக்கள் பாராட்டினார்கள். இந்த முடிவு இம்மொழியில் பயில்வதற்கும், ஆராய்ச்சி செய்வதற்கும் ஊக்கமளிப்பதாகவும் உள்ளது.

@ingshin”

***

(Release ID: 2118334)
TS/SMB/AG/DL