பாலியில் நடைபெறும் ஜி-20 உச்சி மாநாட்டுக்கு இடையே பிரதமர் திரு.நரேந்திர மோடி, பிற ஜி-20 நாடுகளின் தலைவர்களுடன் ‘டமான் ஹுட்டான் ராய என்குரா ராய்’ என்னுமிடத்தில் உள்ள மாங்குரோவ் காடுகளுக்கு பயணம் செய்து பார்வையிட்டார்.
மாங்குரோவ் தாவரங்கள் உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு முயற்சிகளில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. ஜி-20 தலைமைப் பொறுப்பில் இந்தோனேசியா இருந்தபோது, இந்தோனேசியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் கூட்டு முன்முயற்சியான பருவநிலைக்கான மாங்குரோவ் கூட்டணியில் இந்தியா சேர்ந்துள்ளது.
இந்தியாவின் 5000 சதுரகிலோ மீட்டருக்கும் அதிகமான பரப்பளவில் 50-க்கும் அதிகமாக மாங்குரோவ் வகைகள் இருப்பதை காணலாம். காற்றில் உள்ள கார்பனை உறிஞ்சும் திறனும், செழுமையான பல்லுயிர்ப் பெருக்கத்துக்கு உதவும் தன்மையும் கொண்ட மாங்குரோவ் காடுகளை பாதுகாத்து, மறுசீரமைப்பதை இந்தியா வலியுறுத்தி வருகிறது.
**********
(Release ID: 1876310)
PKV/KG/RR
With G-20 leaders at the Mangrove Forest in Bali. @g20org pic.twitter.com/D5L5A1B72e
— Narendra Modi (@narendramodi) November 16, 2022
PM @narendramodi and other G20 leaders visited a mangrove forest in Bali, giving a strong message of coming together to tackle climate change and boost sustainable development. India has also joined the Mangrove Alliance for Climate. pic.twitter.com/vyJX79CEAp
— PMO India (@PMOIndia) November 16, 2022