பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், அடுத்த தலைமுறை செலுத்து வாகனத்தை உருவாக்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. பாரதிய விண்வெளி நிலையத்தை நிறுவி இயக்குவது மற்றும் 2040-ம் ஆண்டுக்குள் நிலவில் இந்திய விண்வெளி வீர்ர்கள் தரையிறங்குவதற்கான திறனை வளர்ப்பது என்ற அரசின் தொலைநோக்குப் பார்வையை நோக்கிய குறிப்பிடத்தக்க படியாக இது அமையும். எல்விஎம்-3 உடன் ஒப்பிடும்போது என்ஜிஎல்வி தற்போதைய செலுத்து திறனை விட 3 மடங்குடன் 1.5 மடங்கு செலவைக் கொண்டிருக்கும்.
அமிர்த காலத்தின் போது, இந்திய விண்வெளித் திட்டத்தின் இலக்குகளை நிறைவேற்ற, அதிக செலுத்து திறன் மற்றும் மறுபயன்பாட்டுடன் கூடிய புதிய தலைமுறை மனித மதிப்பீடு பெற்ற செலுத்து வாகனங்கள் தேவை. எனவே, அடுத்த தலைமுறை செலுத்து வாகனத்தின் (என்.ஜி.எல்.வி) உருவாக்கம் மேற்கொள்ளப்படுகிறது, இது அதிகபட்சமாக 30 டன் செலுத்து திறனை குறைந்த புவி சுற்றுப்பாதையில் வடிவமைக்கிறது, இது மீண்டும் பயன்படுத்தக்கூடிய முதல் நிலையைக் கொண்டுள்ளது. தற்போது, தற்போது செயல்பாட்டில் உள்ள பி.எஸ்.எல்.வி, ஜி.எஸ்.எல்.வி, எல்.வி.எம் 3 மற்றும் எஸ்.எஸ்.எல்.வி செலுத்து வாகனங்கள் மூலம் 10 டன் வரை செயற்கைக்கோள்களை குறைந்த புவி சுற்றுப்பாதைக்கு (எல்.இ.ஓ) மற்றும் 4 டன் வரை புவி-ஒத்திசைவு பரிமாற்ற சுற்றுப்பாதைக்கு (ஜி.டி.ஓ) செலுத்துவதற்கான விண்வெளி போக்குவரத்து அமைப்புகளில் இந்தியா தன்னம்பிக்கை அடைந்துள்ளது.
—-
IR/KPG/DL
India's space ambitions take yet another important leap with the approval of the Next Generation Launch Vehicle (NGLV)! This will bring us closer to establishing the Bharatiya Antariksh Station and achieving a crewed Moon landing by 2040.https://t.co/G2GExuQIyy
— Narendra Modi (@narendramodi) September 18, 2024