நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும் முன்னாள் மக்களவைத் தலைவருமான திரு. சோம்நாத் சாட்டர்ஜி மறைவுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
“நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும் முன்னாள் மக்களவைத் தலைவருமான திரு. சோம்நாத் சாட்டர்ஜி, இந்திய அரசியலில் உரம்பெற்றவர். நமது நாடாளுமன்ற ஜனநாயகத்தை வளப்படுத்திய அவர், ஏழை, எளிய மக்கள் மற்றும் ஒடுக்கபட்டோரின் நலனுக்காக வலுவாகக் குரல் எழுப்பியவர். அவரது மறைவு குறித்து கவலைப்படுகிறேன். அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பிரதமர் கூறியுள்ளார்.
——
Former MP and Speaker Shri Somnath Chatterjee was a stalwart of Indian politics. He made our Parliamentary democracy richer and was a strong voice for the well-being of the poor and vulnerable. Anguished by his demise. My thoughts are with his family and supporters.
— Narendra Modi (@narendramodi) August 13, 2018