தேர்வுக்கான தயாரிப்புகளின் போது மாணவர்களுக்கு ஒரு முக்கிய ஆதரவாக விளங்கும் நேர்மறை சிந்தனையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, நாளைய ’தேர்வு குறித்த கலந்துரையாடல்’ அத்தியாயத்தை அனைவரும் பார்க்க வேண்டும் என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.
MyGovIndia-வின் எக்ஸ் தளப்பதிவுக்கு பதிலளித்த திரு. மோடி கூறியிருப்பதாவது:
“தேர்வு வீரர்களுக்கு தேர்வு நேரத்தில் மிகப்பெரிய துணைகளில் நேர்மறை சிந்தனையும் ஒன்று. நாளைய ’தேர்வு குறித்த கலந்துரையாடல்’ அத்தியாயம் இந்தத் தலைப்பை ஆராய்கிறது, மேலும் விக்ரந்த் மஸ்ஸே, பூமி பெட்னேகர் ஆகியோர் தங்கள் நுண்ணறிவுகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.”
***
PKV/KV
For #ExamWarriors, among the biggest allies during exam time is positivity. Tomorrow’s ‘Pariksha Pe Charcha’ episode delves into this topic and we have @VikrantMassey and @bhumipednekar share their insights. https://t.co/F1bbYLqZno
— Narendra Modi (@narendramodi) February 15, 2025