உடல் பருமன் உள்ளவர்களின் எண்ணிக்கை விகிதம் அதிகரித்து வருவதை முறியடிப்பதன் அவசரத் தேவை பற்றி எடுத்துரைத்துள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, சமையல் எண்ணெய் பயன்பாட்டைக் குறைப்பது பற்றி அறிவுறுத்த பிரமுகர்களை அவர் பரிந்துரைத்துள்ளார். இந்த இயக்கத்தை மேலும் விரிவுபடுத்த அவர்கள் மேலும் 10 பேரை பரிந்துரைக்கவும் வலியுறுத்தி உள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது;
“நேற்றைய #மனதின் குரல் நிகழ்வில் கூறியிருப்பது போல், உடல் பருமனை எதிர்க்கும் போராட்டத்தை வலுப்படுத்தவும், உணவில் சமையல் எண்ணெய் பயன்பாட்டைக் குறைப்பது பற்றி விழிப்புணர்வை பரவலாக்கவும் கீழ்க்காணும் 10 பேரை நியமிக்க நான் விரும்புகிறேன். இவர்கள் ஒவ்வொருவரும் 10 பேரை நியமிக்கவும் நான் கேட்டுக் கொள்கிறேன். இதன் மூலம் நமது இயக்கம் மேலும் பெரிதாகும்!
@anandmahindra
@nirahua1
@realmanubhaker
@mirabai_chanu
@Mohanlal
@NandanNilekani
@OmarAbdullah
@ActorMadhavan
@shreyaghoshal
@SmtSudhaMurty
கூட்டாக இணைந்து இந்தியாவை உடல் தகுதியோடும், ஆரோக்கியமாகவும் நாம் மாற்றுவோம். #FightObesity”
***
(Release ID: 2105690)
TS/SMB/RR/KR
As mentioned in yesterday’s #MannKiBaat, I would like to nominate the following people to help strengthen the fight against obesity and spread awareness on reducing edible oil consumption in food. I also request them to nominate 10 people each so that our movement gets bigger!… pic.twitter.com/bpzmgnXsp4
— Narendra Modi (@narendramodi) February 24, 2025