கோவாவில் மோபா பசுமை சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி திறந்துவைத்தார். கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் பிரதமர் இந்த விமான நிலையத்திற்கு அடிக்கல் நாட்டினார். சுமார் 2870 கோடி ரூபாய் செலவில் நீடித்த உள்கட்டமைப்புடன் இந்த விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது. சூரியசக்தி மின் நிலையம், பசுமை கட்டிடங்கள், ஓடு தளத்தில் எல்இடி விளக்குகள், மழைநீர் சேகரிப்பு, மறுசுழற்சி வசதிகளுடன் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை உள்ளிட்ட இதர வசதிகள் இந்த விமான நிலையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், மோபாவில் பசுமை விமான நிலையம் திறக்கப்பட்டதற்காக நாட்டு மக்களுக்கும், கோவா மக்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். மறைந்த மனோகர் பாரிக்கரின் பெயர் விமான நிலையத்திற்கு சூட்டப்பட்டுள்ளது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். இந்த விமான நிலையத்தில் ஆண்டிற்கு 40 லட்சம் பயணிகளை கையாள முடியும் என்று தெரிவித்த பிரதமர், எதிர்காலத்தில் மூன்றரை கோடி பயணிகளை கையாள முடியும் என்றும் கூறினார்.
முன்னதாக 70 வருடங்களில் 70 விமான நிலையங்கள் இருந்த நிலையில், கடந்த 8 வருடங்களில் 72 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். உலக விமான போக்குவரத்து சந்தையில் இந்தியா 3-ம் இடம் வகிப்பதாகவும் அவர் தெரிவித்தார். உடான் திட்டத்தின் மூலம் சாதாரண குடிமக்களும் விமானப் பயணத்தை மேற்கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளதாக அவர் கூறினார். இத்திட்டத்தின் மூலம் 1 கோடிக்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
கடந்த 8 வருடங்களில் நாட்டின் சுற்றுலா துறையை மேம்படுத்தவும், எளிதாக பயணம் செய்யப்படுவதை உறுதி செய்யவும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை பிரதமர் பட்டியலிட்டார். கடந்த 2015-ம் ஆண்டு இந்தியாவில் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 14 கோடியாக இருந்தது என்றும், கடந்த வருடம் இது சுமார் 70 கோடியாக அதிகரித்தது என்றும் பிரதமர் கூறினார்.
சுற்றுலாத்துறை மூலம் வேலைவாய்ப்பு மற்றும் சுயவேலைவாய்ப்பு கிடைப்பதாக கூறிய பிரதமர், கோவாவில் சுற்றுலா உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை விவரித்தார்.
இந்நிகழ்ச்சியில் கோவா முதலமைச்சர் டாக்டர் பிரமோத் சாவந்த், கோவா ஆளுநர் திரு பி எஸ் ஸ்ரீதரன் பிள்ளை, விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு ஜோதிர் ஆதித்ய சிந்தியா, கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் திரு ஸ்ரீபத் யசோ நாயக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
**************
SRI/IR/AG/IDS
The state-of-the-art airport in Mopa will significantly improve connectivity as well as boost tourism in Goa. https://t.co/rY9M4OY6Z5
— Narendra Modi (@narendramodi) December 11, 2022
International Airport in Mopa, Goa has been named after Late Shri Manohar Parrikar Ji. pic.twitter.com/WfWKEFHdyk
— PMO India (@PMOIndia) December 11, 2022
मनोहर इंटरनेशनल एयरपोर्ट आज देश में इंफ्रास्ट्रक्चर को लेकर बदली हुई सरकारी सोच और अप्रोच का प्रमाण है। pic.twitter.com/0SJhR1UM45
— PMO India (@PMOIndia) December 11, 2022
हमने हवाई यात्रा को देश के छोटे-छोटे शहरों तक पहुंचाने का बीड़ा उठाया। pic.twitter.com/90iS9Is1rf
— PMO India (@PMOIndia) December 11, 2022
We are ensuring that small cities also have air connectivity. pic.twitter.com/Rary2szzDT
— PMO India (@PMOIndia) December 11, 2022
UDAN Yojana has revolutionised air connectivity across India. pic.twitter.com/XzkiF9ibF3
— PMO India (@PMOIndia) December 11, 2022
आज दुनिया भारत को जानना-समझना चाहती है। pic.twitter.com/2NaANk0jL8
— PMO India (@PMOIndia) December 11, 2022
In the last eight years, India has made every possible effort to improve 'Ease of Travel' for the tourists. pic.twitter.com/AcKrOudg9b
— PMO India (@PMOIndia) December 11, 2022
The Manohar International Airport in Goa will boost Goa’s economy and provide a great experience for tourists. It is also a tribute to Manohar Parrikar Ji’s efforts for Goa’s progress. pic.twitter.com/sgun5UJbKa
— Narendra Modi (@narendramodi) December 11, 2022
बीते आठ वर्षों में देश में एयर कनेक्टिविटी का अभूतपूर्व विस्तार हुआ है। यही वजह है कि आज हवाई यात्रा जन सामान्य की पहुंच में है और भारत दुनिया का तीसरा सबसे बड़ा एविएशन मार्केट बन चुका है। pic.twitter.com/grwtYuYqdd
— Narendra Modi (@narendramodi) December 11, 2022
देश में Ease of Travel को सुनिश्चित करने के लिए हमने आधुनिक इंफ्रास्ट्रक्चर और लास्ट माइल कनेक्टिविटी पर फोकस किया है। pic.twitter.com/OrerTMpE0K
— Narendra Modi (@narendramodi) December 11, 2022
गोंयांतलो मनोहर आंतरराश्ट्रीय विमानतळ अर्थवेवस्थेक नेट हाडटलो आनी पर्यटकांक बरो अणभव दितलो. मनोहर पर्रीकर हांणी गोंया खातीर केल्ल्या प्रगतीक तें अभिवादन थारतलें. pic.twitter.com/W7h8vvdtYH
— Narendra Modi (@narendramodi) December 11, 2022