பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் இன்று (ஆகஸ்ட் 9) நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் கீழ்க்காணும் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது:
விளைவு:
கோரக்பூர், சிந்திரி, பரோனி ஆகிய இடங்களில் உள்ள இந்திய உரக் கழகம் (FCIL), இந்துஸ்தான் உரக் கழகம் (HFCL) ஆகியவற்றின் பிரிவுகள் மீண்டும் இயங்குவது உரத் தொழிலில் போதிய முதலீட்டை உறுதி செய்யும். மேலும், கிழக்கு இந்திய மண்டலப் பகுதியின் முக்கியமான மேம்பாட்டுக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் ஜகதீஸ்பூர் – ஹால்தியா குழாய் திட்டத்துக்கு (JHPL) பெருமளவில் ஆதரவாக இருக்கும். இதன் மூலம் ஏராளமான வேலைவாய்ப்புகளும் உருவாகும். கிழக்கு மண்டலப் பகுதியின் பொருளாதார மேம்பாட்டுக்கும் வழியேற்படும். அத்துடன், உள்நாட்டு யூரியா உற்பத்தி அதிகரிக்கும். அதனால், யூரியாவில் தற்சார்பு வலுப்படும்.
விவரங்கள்:
****