கொழும்பில் உள்ள இந்திய அமைதி காக்கும் படை (ஐ.பி.கே.எப்) நினைவிடத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இலங்கையின் அமைதி, ஒற்றுமை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்காக தங்கள் இன்னுயிரை ஈந்த இந்திய அமைதி காக்கும் படையின் துணிச்சலான வீரர்களை அவர் பாராட்டினார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது;
“கொழும்பில் உள்ள இந்திய அமைதி காக்கும் படையினரின் நினைவுத் தூபியில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினேன். இலங்கையின் பிராந்திய ஒருமைப்பாடு, ஒற்றுமை, சமாதானம் ஆகியவற்றுக்கான உயர்பணியில் தங்கள் வாழ்வைத் தியாகம் செய்த இந்திய அமைதிகாக்கும் படையின் துணிச்சல் மிக்க வீரர்களை இத்தருணத்தில் நாம் நினைவுகூர்கிறோம். அவர்களின் அசைக்க முடியாத தைரியமும், அர்ப்பணிப்பும் நம் அனைவரது உத்வேகத்தின் ஆதாரமாக நிலைத்திருக்கின்றன.”
***
(Release ID: 2119327)
PKV/ RJ
Laid a wreath at the IPKF Memorial in Colombo. We remember the brave soldiers of the Indian Peace Keeping Force who laid down their lives in service of peace, unity and the territorial integrity of Sri Lanka. Their unwavering courage and commitment remain a source of inspiration… pic.twitter.com/Ys0AONHIxN
— Narendra Modi (@narendramodi) April 5, 2025
கொழும்பில் உள்ள இந்திய அமைதிப்படையினரின் நினைவுத் தூபியில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினேன். இலங்கையின் ஆட்புல ஒருமைப்பாடு, ஐக்கியம் மற்றும் சமாதானம் ஆகியவற்றுக்கான உயர்பணியில் தமது வாழ்வை தியாகம் செய்த இந்திய அமைதிகாக்கும் படையின் துணிச்சல் மிக்க வீரர்களை இச்சந்தர்ப்பத்தில்… pic.twitter.com/bS3IkmmhiX
— Narendra Modi (@narendramodi) April 5, 2025