ஐடிபிஐ வங்கியில் இந்திய அரசின் பங்குகளை 50 சதவீதத்திற்குக் கீழ் குறைப்பதற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த வங்கியின் கட்டுப்படுத்தும் பங்குகளை ஆயுள் காப்பீட்டுக் கழகம் பெறவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒதுக்கீட்டின் மூலமாக வங்கியை வளர்ப்பவராகவும், சொத்தின் சம பங்குகள், வங்கி நிர்வாகத்தைக் கட்டுப்படுத்தும் அரசின் உரிமையை விட்டுக் கொடுப்பதற்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
தாக்கம்
பின்னணி:
2016ஆம் ஆண்டு தமது பட்ஜெட் உரையின்போது நிதியமைச்சர் ஐ.டி.பி.ஐ. வங்கியின் மடைமாற்றம் செய்வதற்கான வழிமுறைகள் தொடங்கி விட்டது என்று அறிவித்ததோடு, அவ்வங்கியின் அரசின் பங்குகளை 50 சதவீதத்திற்கு கீழாக குறைப்பதற்கான வாய்ப்பை அரசு பரிசீலிக்கும் என்றார். இந்த அறிவிப்பை கவனத்தில் கொண்டு, நிர்வாகத்தின் ஒப்புதலோடு ஆயுள் காப்பீட்டுக் கழகம் ஐடிபிஐ வங்கியின் கட்டுப்படுத்தும் பங்குகளை கையகப்படுத்த இந்திய காப்பீடு முறைப்படுத்தல் மற்றும் வளர்ச்சி ஆணையத்தின் அனுமதியை நாடியது. இந்த ஆணையத்தின் அனுமதியைப் பெற்ற பிறகு ஐடிபிஐ வங்கியின் 31 சதவீத கட்டுப்படுத்தும் பங்குகளை கையகப்படுத்தும் தனது திட்டத்தை ஆயுள் காப்பீட்டுக் கழகம் வெளியிட்டதுஃ நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பிறகு ஐடிபிஐ வங்கியில் அரசின் பங்கு 51 சதவீதத்திற்குக் கீழாக குறைப்பதற்கான அரசின் முடிவு பற்றி கேட்டறிந்தது.