கம்பீரமான தோற்றம் கொண்ட ஆசிய சிங்கங்களின் இருப்பிடமாக அறியப்படும் கிர் பகுதியைப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பார்வையிட்டார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “#உலக வன உயிரின தினமான இன்று கிர் வன உயிரியல் பூங்காவைப் பார்வையிடச் சென்றேன். இது கம்பீரத் தோற்றம் கொண்ட ஆசிய சிங்கங்களின் தாயகமாகும். குஜராத் முதலமைச்சராக பணியாற்றியபோது மேற்கொள்ளப்பட்ட பல்வேறு பணிகள் பல நினைவுகளைக் கொண்டு வருகின்றன. கடந்த சில ஆண்டுகளில், மேற்கொள்ளப்பட்ட கூட்டு முயற்சிகள் ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கை சீராக அதிகரித்து வருவதை உறுதி செய்துள்ளன. ஆசிய சிங்கங்களின் வாழ்விடத்தைப் பாதுகாப்பதில் பழங்குடியின மக்கள் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த பெண்களின் பங்கு பாராட்டத்தக்கது”.
***
(Release ID: 2107658)
TS/SV/KPG/RR
This morning, on #WorldWildlifeDay, I went on a Safari in Gir, which, as we all know, is home to the majestic Asiatic Lion. Coming to Gir also brings back many memories of the work we collectively did when I was serving as Gujarat CM. In the last many years, collective efforts… pic.twitter.com/S8XMmn2zN7
— Narendra Modi (@narendramodi) March 3, 2025