Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

உயிர்த் தியாகம் செய்த அமைதிப் படையினருக்காக புதிய நினைவுச் சுவர் உருவாக்க வேண்டுமென இந்தியா முன்மொழிந்த தீர்மானத்திற்கு ஐ.நா. பொதுச் சபை ஒப்புதல்


உயிர்த் தியாகம் செய்த அமைதிப் படையினருக்காக புதிய நினைவுச் சுவர் உருவாக்க வேண்டுமென இந்தியா முன்மொழிந்த தீர்மானத்திற்கு ஐ.நா. பொதுச்சபை ஒப்புதல் அளித்துள்ளது குறித்து பிரதமர் திரு.நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு வருமாறு:

“உயிர்த் தியாகம் செய்துள்ள அமைதிப்படை வீரர்களுக்கு புதிய நினைவுச் சுவர் அமைக்க வேண்டுமென்ற இந்தியா கொண்டு வந்த தீர்மானம் ஐ.நா. பொதுச்சபையில் நிறைவேறியிருப்பது பெருமகிழ்ச்சியை அளிக்கிறது. இந்தத் தீர்மானத்திற்கு சாதனை அளவாக 190 நாடுகளின் ஆதரவு கிடைத்துள்ளது. ஒவ்வொருவரது ஆதரவுக்கும் நன்றி”.

*******

(Release ID: 1932458)

AD/PKV/RR