உத்கல தினத்தன்று ஒடிசா மக்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஒடியா கலாச்சாரம் உலகளவில் போற்றப்படுகிறது என்றும், இந்தியாவின் வளர்ச்சிக்கு ஒடியா மக்கள் சிறப்புமிக்க பங்களிப்பைத் தந்திருக்கிறார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
டுவிட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது –
“உத்கல தினத்தின் சிறப்பான விழாவையொட்டி ஒடிசா மக்களுக்கு நல்வாழ்த்துக்கள். இந்தியாவின் வளர்ச்சிக்கு ஒடியா மக்கள் சிறப்புமிக்க பங்களிப்பைத் தந்திருக்கிறார்கள், ஒடியா கலாச்சாரம் உலகளவில் போற்றப்படுகிறது. வரவிருக்கும் காலங்களில் ஒடிசாவின் மேம்பாட்டுக்கு நான் பிரார்த்திக்கிறேன்”.
***************
On the special occasion of Utkala Dibasa, best wishes to the people of Odisha. Odia people are making landmark contributions to India’s progress and Odia culture is globally admired. I pray for Odisha’s development in the times to come.
— Narendra Modi (@narendramodi) April 1, 2022