கொழும்பில் உள்ள அதிபர் செயலகத்தில் இலங்கை அதிபர் திரு அனுரகுமார திசநாயக்கவுடன் பிரதமர் இன்று ஒரு ஆக்கபூர்வமான சந்திப்பை மேற்கொண்டார். பேச்சுவார்த்தைக்கு முன்னதாக, சுதந்திர சதுக்கத்தில் பிரதமருக்கு சம்பிரதாய வரவேற்பு அளிக்கப்பட்டது. 2024 செப்டம்பர் மாதம் அதிபர் திசநாயக்க பதவியேற்ற பின்னர் இலங்கைக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்ட முதலாவது வெளிநாட்டுத் தலைவர் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆவார்.
பகிரப்பட்ட வரலாற்றில் வேரூன்றியுள்ள மற்றும் வலுவான மக்களுக்கு இடையேயான இணைப்புகளால் உந்தப்படும் நெருக்கமான சிறப்பு இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் வரையறுக்கப்பட்ட மற்றும் பிரதிநிதிகள் அளவிலான வடிவத்தில் விரிவான விவாதங்களை நடத்தினர். இணைப்பு, வளர்ச்சி ஒத்துழைப்பு, பொருளாதார உறவுகள், பாதுகாப்பு உறவுகள், நல்லிணக்கம், மீனவர் பிரச்சினைகள் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பு குறித்து அவர்கள் ஆய்வு செய்தனர். இந்தியாவின் அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை கொள்கை மற்றும் தொலைநோக்கு மகாசாகர் ஆகியவற்றில் இலங்கையின் முக்கியத்துவத்தை பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார். இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் நிலைப்படுத்தலுக்கு உதவ இந்தியாவின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை அவர் தெரிவித்தார்.
பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, இரு தலைவர்களும் மெய்நிகர் முறையில் பல திட்டங்களைத் தொடங்கி வைத்தனர். இலங்கை முழுவதும் உள்ள மத இடங்களில் நிறுவப்பட்ட 5000 சூரிய கூரை அலகுகள் மற்றும் தம்புல்லாவில் வெப்பநிலை கட்டுப்பாட்டு கிடங்கு வசதி ஆகியவை இதில் அடங்கும். 120 மெகாவாட் சம்பூர் சூரிய மின்சக்தி திட்டத்தை தொடங்கி வைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவிலும் அவர்கள் மெய்நிகர் முறையில் பங்கேற்றனர்.
கிழக்கு மாகாணத்தில் எரிசக்தி, டிஜிட்டல்மயமாக்கல், பாதுகாப்பு, சுகாதாரம் ஆகிய துறைகளில் ஏழு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இரு தரப்பிலும் பரிமாறிக் கொள்ளப்பட்டதை இரு தலைவர்களும் நேரில் கண்டனர். திருகோணமலையில் உள்ள திருக்கோணேஸ்வரம் விகாரை, அநுராதபுரத்தில் புனித நகரத் திட்டம் மற்றும் நுவரெலியாவில் உள்ள சீதா எலிய விகாரை கட்டிடத் தொகுதி ஆகியவற்றின் அபிவிருத்திக்கு ஒத்துழைப்பை பிரதமர் அறிவித்தார்.
திறன் மேம்பாடு மற்றும் பொருளாதார ஆதரவு ஆகிய துறைகளில், ஆண்டுக்கு கூடுதலாக 700 இலங்கை குடிமக்களைப் பயிற்றுவிப்பதற்கான ஒரு விரிவான தொகுப்பு மற்றும் கடன் மறுசீரமைப்பு தொடர்பான இருதரப்பு திருத்த உடன்படிக்கைகள் ஆகியவையும் அறிவிக்கப்பட்டன. இரு நாடுகளின் புத்த மத பாரம்பரியத்தை பகிர்ந்து கொள்வதைக் கருத்தில் கொண்டு, சர்வதேச விசாக தினக் கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக குஜராத்தைச் சேர்ந்த புத்தரின் புனித நினைவுச் சின்னங்கள் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் என்று பிரதமர் அறிவித்தார்.
***
(Release ID: 2119278)
PKV/RJ
Substantial ground has been covered since President Dissanayake visited India, particularly in sectors like energy, solar power, technology and more. In our talks today, we discussed ways to add more momentum to linkages in security, trade, agriculture, housing, culture and other… pic.twitter.com/tPembAxu8B
— Narendra Modi (@narendramodi) April 5, 2025
Held extensive and productive talks with President Anura Kumara Dissanayake in Colombo. A few months ago, President Dissanayake chose India as the place for his first overseas visit after becoming President. Now, I have the honour of being the first foreign leader he is hosting… pic.twitter.com/dQnGZVcClW
— Narendra Modi (@narendramodi) April 5, 2025
PM @narendramodi held fruitful talks with President @anuradisanayake in Colombo. The two leaders reviewed the full spectrum of India-Sri Lanka bilateral relations and explored avenues to deepen cooperation in sectors like energy, solar power, digital technology, trade,… pic.twitter.com/4sNtCSTvxr
— PMO India (@PMOIndia) April 5, 2025