Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்திய பட்டயக் கணக்காளர்கள் கல்விக் கழகத்திற்கும், போலந்தின் சட்ட அங்கீகாரம் பெற்ற கணக்கு தணிக்கையாளர்கள் சங்கத்திற்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது


இந்திய பட்டயக் கணக்காளர்கள் கல்விக் கழகத்திற்கும்போலந்தின் சட்ட அங்கீகாரம் பெற்ற கணக்கு தணிக்கையாளர்கள் சங்கத்திற்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான  அமைச்சரவை  இன்று ஒப்புதல் அளித்தது.  உறுப்பினர் நிர்வாகம், தொழில் நெறிமுறை, தொழில்நுட்ப ஆராய்ச்சி, தொடர்ச்சியான தொழில் முறை மேம்பாடு,  தொழில் முறை கணக்குக்கான பயிற்சி, தணிக்கைத் தரத்தைக் கண்காணித்தல், கணக்கிடுதல் அறிவில் முன்னேற்றம், தொழில் முறை மற்றும் அறிவுசார் மேம்பாடு ஆகியவற்றில் பரஸ்பரம் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. 

குறுகிய காலம் முதல் நீண்ட காலம் வரையிலான சிறப்பு அம்சத்தில் இந்திய பட்டயக் கணக்காளர்கள், கல்விக் கழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு நவீனப் பயிற்சி வழங்க போலந்தில் வாய்ப்புகளை ஏற்படுத்த இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது.  ஐரோப்பாவில் தடம் பதிப்பதை இது வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இருஅமைப்புகளின் உறுப்பினர்களுக்கு பரஸ்பரம் பயன்தரும் உறவை மேம்படுத்துவதற்கு இணைந்து பணியாற்றுவதையும் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் நோக்கமாக கொண்டுள்ளது. 

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1784262

*********