இந்தியா- அமெரிக்காவின் எதிர்காலத்திற்கான திறன் சார்ந்த நிகழ்ச்சியில், பிரதமர் திரு நரேந்திர மோடியும், அமெரிக்க முதல் பெண்மணி ஜில் பைடனும் பங்கேற்றனர். வாஷிங்டனில் உள்ள தேசிய அறிவியல் மையத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சி இந்தியா மற்றும் அமெரிக்காவின் எதிர்கால திறன் மேம்பாட்டில் கவனம் செலுத்துவதை கருத்தில் கொண்டு நடத்தப்பட்டது. குறிப்பாக உயர்கல்வி நிறுவனங்களில் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்கான பணிகளை முன்நிறுத்தி இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் திரு நரேந்திர மோடி கல்வி திறன் மேம்பாடு மற்றும் புத்தாக்க முயற்சிகளை மேம்படுத்துவதற்காக இந்தியா மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளை பட்டியலிட்டார். அதே நேரத்தில் இரு நாடுகளுக்கு இடையேயான கல்வி மேம்பாட்டு பரிமாற்றங்கள், இந்திய மற்றும் அமெரிக்க கல்வி நிறுவனங்களின் ஒத்துழைப்பு மற்றும் ஆராய்ச்சி சூழல்களுக்கான பணிகளை வரவேற்றார். குறிப்பாக கல்வி மற்றும் ஆராய்ச்சி துறையில் இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து செயல்படுவதற்கான ஐந்து முக்கிய பரிந்துரைகளையும் பிரதமர் மோடி சமர்ப்பித்தார்.
அவை
இந்த நிகழ்ச்சியில் வடக்கு வெர்ஜினியா சமூக கல்லூரியின் தலைவர், அமெரிக்க பல்கலைக்கழகங்களுக்கான சங்கத்தின் தலைவர், மைக்ரான் தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைவர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
***
(Release ID: 1934352)
LK/ES/AG/KRS
LIVE. PM @narendramodi's remarks during his visit to the National Science Foundation. https://t.co/K3njU8sOlA
— PMO India (@PMOIndia) June 21, 2023
Honoured that @FLOTUS @DrBiden joined us in a special event relating to skill development. Skilling is a top priority for India and we are dedicated to creating a proficient workforce that can boost enterprise and value creation. pic.twitter.com/eXibkMme9c
— Narendra Modi (@narendramodi) June 21, 2023