ஆந்திர மாநிலம், புட்டபர்த்தியில் உள்ள லெபாக்ஷியில் உள்ள வீரபத்ரர் கோவிலில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பூஜை செய்து வழிபட்டார். தெலுங்கில் ரங்கநாத ராமாயணத்தின் வசனங்களைக் கேட்ட திரு மோடி, தோலு பொம்மலாட்டா என்று அழைக்கப்படும் ஆந்திராவின் பாரம்பரிய நிழல் பொம்மலாட்ட கலை வடிவத்தின் மூலம் காட்சிப்படுத்தப்பட்ட ஜடாயுவின் கதையைக் கண்டு மகிழ்ந்தார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
“பிரபு ஸ்ரீ ராமரின் பக்தர்களான அனைவருக்கும், லெபாக்ஷி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இன்று, வீரபத்ரர் கோவிலில் பிரார்த்தனை செய்யும் பாக்கியம் கிடைத்தது. இந்திய மக்கள் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும், செழிப்பின் புதிய உயரங்களைத் தொடவும் நான் பிரார்த்தனை செய்தேன்.”
“லெபாக்ஷி வீரபத்ரர் கோயிலில், ரங்கநாத ராமாயணத்தைக் கேட்டேன், ராமாயணத்தின் பொம்மலாட்ட நிகழ்ச்சியையும் பார்த்தேன்.”
—-
(Release Id 1996705)
ANU/SM/IR/KPG/KRS
For all those who are devotees of Prabhu Shri Ram, Lepakshi holds great significance. Today, I had the honour of praying at the the Veerbhadra Temple. I prayed that the people of India be happy, healthy and scale new heights of prosperity. pic.twitter.com/vb8AaBKNxh
— Narendra Modi (@narendramodi) January 16, 2024
At the Veerbhadra Temple, Lepakshi, heard the Ranganatha Ramayana and also saw a puppet show on the Ramayan. pic.twitter.com/PGOdJ3zmDz
— Narendra Modi (@narendramodi) January 16, 2024