Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஆந்திரப் பிரதேச மாநிலம் அனகாபள்ளி மாவட்டத்தில் தொழிற்சாலையில் நிகழ்ந்த விபத்தில் ஏற்பட்ட உயிர் இழப்புகளுக்குப் பிரதமர் இரங்கல்


ஆந்திரப் பிரதேச மாநிலம் அனகாபள்ளி மாவட்டத்தில் நிகழ்ந்த தொழிற்சாலை விபத்தில் ஏற்பட்ட உயிர் இழப்புகளுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ₹ 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ₹ 50 ஆயிரமும் பிரதமர் தேசிய நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என்று பிரதமர் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“ஆந்திரப் பிரதேச மாநிலம் அனகாபள்ளி மாவட்டத்தில் தொழிற்சாலை விபத்தில் ஏற்பட்ட உயிர் இழப்புகள் ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு உள்ளூர் நிர்வாகம் உதவி வருகிறது.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ₹ 2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு தலா ₹ 50,000 வழங்கப்படும்: பிரதமர் நரேந்திர மோடி ( @narendramodi )”

****

PLM/DL