Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் 2022 குண்டு எறிதல் எஃப் -56/57 பிரிவில், ஹோடோஷே தேனா ஹோகாடோ வெண்கலப் பதக்கம் வென்றதற்குப் பிரதமர் பாராட்டு தெரிவித்துள்ளார்


சீனாவின் ஹாங்ஜோ நகரில் நடைபெற்று வரும்  ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் 2022 குண்டு எறிதல் ஷாட்புட் எஃப்-56/57 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற ஹோடோஷே தேனா ஹொகாடோவுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் பதிவில்  பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:

“குண்டு எறிதல் எஃப் –56/57 பிரிவில் குறிப்பிடத்தக்க வெண்கலப் பதக்கம் வென்ற ஹோடோஷே தேனா ஹொகாடோவுக்கு வாழ்த்துகள்.

அவரது அபாரமான உத்வேகம் மற்றும் வலிமையால் இந்தியா பெருமிதம் கொள்கிறது. அவரது எதிர்காலப் பயணம் மேலும் மகத்தான வெற்றிகளால் சிறப்படையட்டும்.

***

ANU/SMB/BR/KPG