Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்ற குண்டு எறிதல் வீரர் ரவி ரோங்காலிக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்


ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் குண்டு எறிதல் எஃப் 40 பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற குண்டு எறிதல் வீரர் ரவி ரோங்காலிக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று வாழ்த்து தெரிவித்தார்.

ரவியை ஓர் உத்வேகமூட்டும் வீரர் என்று அழைத்த பிரதமர், அவரது சாதனையைப் பாராட்டினார்.

சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:

“ஆடவருக்கான குண்டு எறிதல் எஃப் 40 போட்டியில் அற்புதமாக வெள்ளிப் பதக்கம் வென்ற திறமைமிகு ரவி ரோங்காலிக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

ரவி பலருக்கு உத்வேகம் அளிக்கிறார், அவரது குறிப்பிடத்தக்க சாதனை, அவரது அசாதாரண வலிமை மற்றும் அர்ப்பணிப்புக்கு சான்றாகும்.”

***

ANU/AD/SMB/DL