அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் 36-வது தேசிய விளையாட்டுப் போட்டிகளை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று துவக்கி வைத்தார். இந்த நிகழ்வின் போது தேசாரில் உலகத்தரம் வாய்ந்த “ஸ்வர்ணிம் குஜராத் விளையாட்டு பல்கலைக்கழகத்தையும்” அவர் திறந்து வைத்தார். நாடு முழுவதிலும் இருந்து தேசிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளும் வீரர்களிடமும் பிரதமர் கலந்துரையாடினார்.
விழாவில் பேசிய பிரதமர், தேசிய விளையாட்டுப் போட்டிகளின் துவக்க விழாவில் காணப்படும் உற்சாகத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என்று கூறினார். முன் எப்போதும் இல்லாத வகையில் 7000-க்கும் அதிகமான தடகள வீரர்கள், சுமார் 15,000 பங்கேற்பாளர்கள், 35,000 கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பள்ளிகள், இவற்றைத் தவிர்த்து ஏறத்தாழ 50 லட்சம் மாணவர்கள் நேரடியாக இணைந்துள்ள தேசிய விளையாட்டுப் போட்டிகள் பிரமிக்க வைப்பதாக அவர் குறிப்பிட்டார். வீரர்களின் முகங்களில் காணப்படும் நம்பிக்கை ஒளி, வரவிருக்கும் இந்திய விளையாட்டின் பொற்காலத்தின் முன்னோட்டமாக அமைந்துள்ளது என்றார் அவர்.
அகமதாபாத்தில் நேற்று நடைபெற்ற பிரம்மாண்டமான ட்ரோன் விழாவை நினைவுகூர்ந்த பிரதமர், இது போன்ற கண்கவர் நிகழ்வைக் கண்டு அனைவரும் பெருமிதமும், ஆச்சரியமும் அடைந்ததாகத் தெரிவித்தார். “இதுபோன்ற தொழில்நுட்பத்தின் ஆக்கப்பூர்வமான பயன்பாடு, குஜராத் மாநிலத்தையும், இந்தியாவையும் புதிய உச்சத்திற்கு எடுத்துச் செல்லும்”, என்று அவர் மேலும் கூறினார். மைதானத்தின் தனித்துவம் பற்றி பேசுகையில், இதர வளாகங்கள் ஒரு சில விளையாட்டுகளுக்கான வசதிகளை மட்டுமே கொண்டிருக்கும் வேளையில், கால்பந்து, ஹாக்கி, கூடைப்பந்து, கபடி, குத்துச் சண்டை, லான் டென்னிஸ் உள்ளிட்ட ஏராளமான போட்டிகளை நடத்துவதற்கான வசதியை சர்தார் பட்டேல் விளையாட்டு வளாகம் பெற்றிருப்பதாக பிரதமர் தெரிவித்தார்.
தேசிய அளவில் விளையாட்டின் முக்கியத்துவத்தை பிரதமர் எடுத்துரைத்தார். “ஆடுகளத்தில் வீரர்களின் வெற்றி, அவர்களது வலிமையான செயல்திறன் முதலியவை இதர துறைகளில் நாடு சாதனை புரிவதற்கும் வழிவகை செய்கிறது. விளையாட்டின் மென்மையான ஆற்றல் நாட்டின் அடையாளத்தையும், கண்ணோட்டத்தையும் பெரும் மடங்கு அதிகரிக்கிறது. ஒரு செயலிலிருந்து வெற்றி துவங்குகிறது என்று விளையாட்டு சம்பந்தமான எனது நண்பர்களிடம் நான் அடிக்கடி கூறுவேன். அதாவது ஒரு செயலை நீங்கள் தொடங்கும் போது அந்த நொடியே வெற்றியும் ஆரம்பிக்கிறது. முன்னேறும் முயற்சியை நீங்கள் கைவிடாமல் இருந்தால் வெற்றியும் உங்களை துரத்திக் கொண்டே வரும்”, என்று பிரதமர் தெரிவித்தார்.
8 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்ட சர்வதேச போட்டிகளின் எண்ணிக்கை 100-க்கும் குறைவாக இருந்தது என்றும், அதற்கு மாறாக தற்போது 300-க்கும் அதிகமான விளையாட்டுகளில் இந்திய வீரர்கள் பங்கேற்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். “8 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய வீரர்கள் 20- 25 விளையாட்டுகளில் பங்கேற்பார்கள். தற்போது அவர்கள் சுமார் 40 வெவ்வேறு போட்டிகளில் கலந்து கொள்கிறார்கள். பதக்கங்களின் எண்ணிக்கையும் இந்தியாவின் பெருமையும் இன்று உயர்கிறது”, என்றார் அவர்.
இந்த நிகழ்ச்சியில் குஜராத் முதலமைச்சர் திரு புபேந்திர பட்டேல், மாநில ஆளுநர் திரு ஆச்சார்யா தேவ்விரத், மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர், நாடாளுமன்ற உறுப்பினர் திரு சி. ஆர். பாட்டில், குஜராத் உள்துறை அமைச்சர் திரு ஹார்ஸ் சங்வி, அகமதாபாத் மேயர் திரு கிரித் பர்மர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
**************
(Release ID: 1863511)
Sports is a great unifier. Inaugurating the National Games being held in Gujarat. https://t.co/q9shNsjA3A
— Narendra Modi (@narendramodi) September 29, 2022
विश्व का सबसे बड़ा स्टेडियम,
— PMO India (@PMOIndia) September 29, 2022
विश्व का इतना युवा देश,
और देश का सबसे बड़ा खेल उत्सव!
जब आयोजन इतना अद्भुत और अद्वितीय हो, तो उसकी ऊर्जा ऐसी ही असाधारण होगी: PM @narendramodi begins his speech as he declares open the National Games
कल अहमदाबाद में जिस तरह का शानदार, भव्य ड्रोन शो हुआ, वो देखकर तो हर कोई अचंभित है, गर्व से भरा हुआ है।
— PMO India (@PMOIndia) September 29, 2022
टेक्नोलॉजी का ऐसा सधा हुआ इस्तेमाल, ड्रोन की तरह ही गुजरात को, भारत को नई ऊंचाई पर ले जाएगा: PM @narendramodi https://t.co/U8FmoPybti
सरदार पटेल स्पोर्ट्स कॉम्प्लेक्स में फुटबाल, हॉकी, बास्केटबॉल, कबड्डी, बॉक्सिंग और लॉन टेनिस जैसे अनेकों खेलों की सुविधा एक साथ उपलब्ध है।
— PMO India (@PMOIndia) September 29, 2022
ये एक तरह से पूरे देश के लिए एक मॉडल है: PM @narendramodi
इस समय नवरात्रि का पावन अवसर भी चल रहा है।
— PMO India (@PMOIndia) September 29, 2022
गुजरात में माँ दुर्गा की उपासना से लेकर गरबा तक, यहाँ की अपनी अलग ही पहचान है।
जो खिलाड़ी दूसरे राज्यों से आए हैं, उनसे मैं कहूंगा कि खेल के साथ ही यहां नवरात्रि आयोजन का भी आनंद जरूर लीजिये: PM @narendramodi
खेल के मैदान में खिलाड़ियों की जीत, उनका दमदार प्रदर्शन, अन्य क्षेत्रों में देश की जीत का भी रास्ता बनाता है।
— PMO India (@PMOIndia) September 29, 2022
स्पोर्ट्स की सॉफ्ट पावर, देश की पहचान को, देश की छवि को कई गुना ज्यादा बेहतर बना देती है: PM @narendramodi
मैं स्पोर्ट्स के साथियों को अक्सर कहता हूँ- Success starts with action!
— PMO India (@PMOIndia) September 29, 2022
यानी, आपने जिस क्षण शुरुआत कर दी, उसी क्षण सफलता की शुरुआत भी हो गई: PM @narendramodi
8 साल पहले तक भारत के खिलाड़ी, सौ से भी कम इंटरनेशनल इवेंट्स में हिस्सा लेते थे।
— PMO India (@PMOIndia) September 29, 2022
अब भारत के खिलाड़ी 300 से भी ज्यादा इंटरनेशनल इवेंट्स में शामिल होते हैं: PM @narendramodi
8 साल पहले भारत के खिलाड़ी 20-25 खेलों को खेलने ही जाते थे।
— PMO India (@PMOIndia) September 29, 2022
अब भारत के खिलाड़ी करीब 40 अलग-अलग खेलों में हिस्सा लेने जाते हैं: PM @narendramodi
हमने स्पोर्ट्स स्पिरिट के साथ स्पोर्ट्स के लिए काम किया।
— PMO India (@PMOIndia) September 29, 2022
TOPS जैसी योजनाओं के जरिए वर्षों तक मिशन मोड में तैयारी की।
आज बड़े-बड़े खिलाड़ियों की सफलता से लेकर नए खिलाड़ियों के भविष्य निर्माण तक, TOPS एक बड़ी भूमिका निभा रहा है: PM @narendramodi
आज फिट इंडिया और खेलो इंडिया जैसे प्रयास एक जन-आंदोलन बन गए हैं।
— PMO India (@PMOIndia) September 29, 2022
इसीलिए, आज खिलाड़ियों को ज्यादा से ज्यादा संसाधन भी दिए जा रहे हैं और ज्यादा से ज्यादा अवसर भी मिल रहे हैं।
पिछले 8 वर्षों में देश का खेल बजट करीब 70 प्रतिशत बढ़ा है: PM @narendramodi
अब देश के प्रयास और उत्साह केवल एक खेल तक सीमित नहीं है, बल्कि ‘कलारीपयट्टू’ और योगासन जैसे भारतीय खेलों को भी महत्व मिल रहा है।
— PMO India (@PMOIndia) September 29, 2022
मुझे खुशी है कि इन खेलों को नेशनल गेम्स जैसे बड़े आयोजनों में शामिल किया गया है: PM @narendramodi
सभी खिलाड़ियों को मैं एक मंत्र और देना चाहता हूं...
— PMO India (@PMOIndia) September 29, 2022
अगर आपको competition जीतना है, तो आपको commitment और continuity को जीना सीखना होगा।
खेलों में हार-जीत को कभी भी हमें आखिरी नहीं मानना चाहिए।
ये स्पोर्ट्स स्पिरिट आपके जीवन का हिस्सा होना चाहिए: PM @narendramodi