Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

அமிர்தசரஸில் ஏற்பட்ட ரயில் விபத்தில் உயிர் இழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்


அமிர்தசரஸில் ஏற்பட்ட ரயில் விபத்தில் உயிர் இழந்தவர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

” அமிர்தசரஸில் ஏற்பட்ட ரயில் விபத்து மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. இந்த துயர சம்பவம் இதயத்தை பிழிவதாக உள்ளது. இந்த விபத்தில் உயிர் இழந்தவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். தேவையான உதவிகளை உடனடியாக வழங்குமாறு அதிகாரிகளை கேட்டுக்கொண்டுள்ளேன்”, என்று பிரதமர் தனது டுவிட்டர் பதிவில் கூறியுள்ளார்.

***