கேலோ இந்தியா பாரா விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர், தில்லியில் முதல் கேலோ இந்தியா பாரா விளையாட்டுப் போட்டிகள் தொடங்குவது குறித்துத் தெரிவித்ததாக பிரதமர் தனது எக்ஸ் பதிவில் கூறியுள்ளார்.
“முதல் கேலோ இந்தியா பாரா விளையாட்டுப் போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில், பங்கேற்கும் அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் எனது வாழ்த்துகள். இது அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் அதிகாரமளித்தலை நோக்கிய ஒரு மகத்தான முன்னெடுப்பாகும்!”
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1985246
*************
As the First Khelo India Para Games begin, my best wishes to all those athletes who are taking part. It is a monumental step towards inclusion and empowerment! https://t.co/l0kvfhT8Xd
— Narendra Modi (@narendramodi) December 11, 2023