Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் 2022 -ல் ஆடவர் பேட்மிண்டன் ஒற்றையர் எஸ்.எல்-4 பிரிவில் சுகந்த் கதம் வெண்கலப் பதக்கம் வென்றதைப் பிரதமர் கொண்டாடினார்


சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வரும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் 2022-ல் ஆடவர் பேட்மிண்டன் ஒற்றையர் எஸ்.எல்-4 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற சுகந்த் கதமுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:

 

“ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் பேட்மிண்டன் ஒற்றையர் எஸ்.எல் -4 இல் சிறப்பாக செயல்பட்ட சுகந்த் கதமுக்கு வாழ்த்துகள்.

அவரது திறமை, உறுதி, விடாமுயற்சி ஆகியவை நாட்டுக்குப் பெருமை சேர்த்துள்ளது. இந்த வெண்கலப் பதக்கம் அவரது கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புக்கு ஒரு பிரகாசமான சான்றாகும்.

***

ANU/SMB/IR/RS/KPG