Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

2022 ஆசிய விளையாட்டுப் போட்டியில் 50 மீட்டர் ரைபிள் 3 பி பிரிவில் ஆண்கள் அணி தங்கப் பதக்கம் வென்றதை பிரதமர் பாராட்டியுள்ளார்


ஹாங்சோவில் நடைபெறும் 2022 ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவர் 50 மீட்டர் ரைபிள் 3 பி குழு பிரிவில் உலக சாதனை படைத்து தங்கப் பதக்கம் வென்ற ஸ்வப்னில் குசலே, ஐஸ்வர்யா பிரதாப் சிங் தோமர் மற்றும் அகில் ஷியோரன் ஆகியோருக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ்-பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:

ஒரு அற்புதமான வெற்றி, மதிப்புமிக்க தங்கம் மற்றும் ஒரு உலக சாதனை! ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவர் 50 மீட்டர் ரைபிள் 3 பி குழு பிரிவில் வெற்றி பெற்ற ஸ்வப்னில் குசலே, ஐஸ்வர்யா பிரதாப் சிங் தோமர் மற்றும் அகில் ஷியோரன் ஆகியோருக்கு வாழ்த்துகள். அவர்கள் அசாதாரணமான உறுதியையும் குழு உழைப்பையும் காட்டியுள்ளனர்’’.

—–

ANU/AD/PKV/KPG