Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மனதின் குரல் நிகழ்ச்சிக்கான கருத்துக்களை பகிருமாறு மக்களுக்கு பிரதமர் அழைப்பு


வரும்  25-ம் தேதி  காலை 11 மணிக்கு ஒலிபரப்பாகவுள்ள மனதின் குரல் நிகழ்ச்சிக்கு தங்கள் ஆலோசனைகளைப் பகிர்ந்து கொள்ளுமாறு மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். நமோ செயலி, மைகவ் ஆகியவற்றில் எழுதுமாறும்,  1800-11-7800 என்ற எண்ணில் தங்கள் செய்தியை பதிவு செய்யுமாறும் மக்களை திரு மோடி வலியுறுத்தியுள்ளார்.

MyGov இன் அழைப்பைப் பகிர்ந்து பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;

“இம்மாதம் 25-ஆம் தேதி ஒலிபரப்பாகவுள்ள 2022-ம் ஆண்டின் கடைசி மனதின் குரல் நிகழ்ச்சிக்கான உங்கள் உள்ளீடுகளைப் பெற ஆவலாக உள்ளேன். நமோ செயலி, மைகவ் ஆகியவற்றில் எழுதுங்கள், அல்லது உங்கள் செய்தியை 1800-11-7800 இல் பதிவு செய்யுங்கள்.”

 **************

(Release ID: 1882970)

SRI/PKV/RR