Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரபல டென்னிஸ் வீரர் திரு நரேஷ் குமாரின் மறைவிற்கு பிரதமர் இரங்கல்


 பிரபல டென்னிஸ் வீரர் திரு நரேஷ் குமாரின் மறைவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

ட்விட்டர் பதிவில் அவர் கூறியிருப்பதாவது:

இந்திய விளையாட்டுத்துறையில் அளித்துள்ள முதன்மையான பங்களிப்பிற்காக திரு நரேஷ் குமார் என்றும் நினைவில் கொள்ளப்படுவார். டென்னிஸ் போட்டியைப் பிரபலமடையச் செய்ததில் அவர் முக்கிய பங்காற்றினார். தலைசிறந்த வீரராக மட்டுமல்லாமல், போற்றத்தக்க வழிகாட்டியாகவும் அவர் திகழ்ந்தார். அவரது மறைவினால் துயரடைந்தேன். அன்னாரது குடும்பத்தினருக்கும்நண்பர்களுக்கும் எனது இரங்கல்கள். ஓம் சாந்தி.

———-

(Release ID:1859386)