அகமதாபாத்தில் நவபாரத் சாகித்ய கோவில் ஏற்பாடு செய்திருந்த ‘கல்மனோ கார்னிவல்’ எனும் புத்தகக் கண்காட்சியின் தொடக்க விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி வாயிலாக கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், கல்மனோ கார்னிவல் நிகழ்ச்சிக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை பிரதமர் தெரிவித்துக் கொண்டார். அகமதாபாத்தில் நவ்பாரத் சாகித்ய கோவில் தொடங்கிய பாரம்பரிய புத்தக கண்காட்சி ஒவ்வொரு ஆண்டும் சிறப்புப் பெற்று வருவதாக பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார். புதிய மற்றும் இளைய எழுத்தாளர்களுக்கான தளமாக புத்தகக் காட்சி இருக்கிறது என்றும் அத்துடன் குஜராத்தின் இலக்கியத்தையும் அறிவையும் விரிவுப்படுத்த உதவுகிறது என்றும் பிரதமர் குறிப்பிட்டார். இந்த உயர்ந்த பாரம்பரியத்திற்காக நவபாரத் சாகித்ய கோவில் மற்றும் அதன் உறுப்பினர்களுக்கு பிரதமர் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
இந்த கல்மனோ கார்னிவெல் எனும் புத்தகக் கண்காட்சி என்பது இந்தி, ஆங்கிலம் மற்றும் குஜராத்தி மொழி புத்தகங்களின் பெரிய சங்கமமாக அமைந்துள்ளது என்று பிரதமர் தெரிவித்தார். தாம் குஜராத் முதலமைச்சராக இருந்தபோது, வன்சே குஜராத் இயக்கத்தை மாநில அரசு தொடங்கியதாக திரு மோடி குறிப்பிட்டார். தற்போது புத்தகக் கண்காட்சி போன்ற இயக்கங்கள் மட்டுமே, குஜராத்தை முன்னோக்கி எடுத்துச் செல்வதாக தெரிவித்தார். புத்தகங்கள் மற்றும் உரைகள் ஆகிய இரண்டும் நமது கல்வி போதனையின் அடிப்படைக் கூறுகள் என்று அவர் கூறினார். இது குஜராத்தின் நூலகங்களின் மிக பழமையான பாரம்பரியம் என்று தெரிவித்தார். வதோதரா மகாராஜா சாயிஜிராவ் கெய்க்வார்டு அவர்கள் தமது பகுதியிலிருந்த அனைத்துக் கிராமங்களிலும் நூலகங்களை உருவாக்கினார் என்று பிரதமர் குறிப்பிட்டார். கோண்டாலின் மகாராஜா பகவத் சிங் அவர்கள், பகவத் கோ மண்டல் என்றழைக்கப்படும் பெரிய அகராதியை அளித்தார் என்றும் அவருடைய ஆஸ்தான கவிஞர் நர்மத், நர்ம் கோஷி எனும் குஜராத்தி மொழி அகராதியை எழுதினார் என்றும் அவர் எடுத்துரைத்தார். புத்தகங்கள், ஆசிரியர்கள், இலக்கிய உருவாக்கம் ஆகியவற்றில் குஜராத் வரலாற்று சிறப்புடையது என்று தெரிவித்தார். இது போன்ற புத்தகக் கண்காட்சிகள் குஜராத்தின் இளைஞர்கள் உட்பட ஒவ்வொரு பகுதி மக்களையும் சென்றடைய விரும்புகிறேன் என்று அவர் கூறினார். இதன் மூலம் பாரம்பரிய வரலாறு பற்றி அவர்கள் அறிந்துகொண்டு ஊக்கமடைய வாய்ப்பு ஏற்படும் என்றும் தெரிவித்தார்.
அமிர்தப் பெருவிழாவின் போது புத்தகக் கண்காட்சி நடைபெறுவது, அனைவரது கவனத்தையும் ஈர்ப்பதாக பிரதமர் கூறினார். நமது சுதந்திரப் போராட்டத்தை மீண்டும் நினைவு கூர்வது அமிர்தப் பெருவிழாவின் முக்கிய பகுதி என்றும் அவர் தெரிவித்தார். சுதந்திரப் போராட்டத்தின் மறக்கப்பட்ட அத்தியாயங்களை நம் நாட்டிற்கு வழங்கி வருகிறோம் என்று கூறினார். புத்தகக் கண்காட்சி போன்ற நிகழ்வுகள், நாட்டின் இந்த இயக்கத்திற்கு உத்வேகத்தை அளிக்க முடியும் என்று தெரிவித்தார். சுதந்திரப் போராட்டம் தொடர்பான புத்தக்கங்களுக்கு சிறப்பு முக்கியத்துவம் தரப்பட வேண்டும் என்றும் அந்த எழுத்தாளர்களுக்கு நல்ல அடித்தளத்தை அமைத்துத் தரவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இந்த திசையில், நேர்மறையான போக்கை ஏற்படுத்துவதற்கு இந்த நிகழ்வு நிரூபிக்கும் என்று உறுதி கூறுவதாக அவர் தெரிவித்தார்.
ஒருவர் செயல்திறன் மிக்கவராக திகழவும், பயனுள்ள நபராக விளங்கவும் வேதங்கள், உரைகள் மற்றும் புத்தகங்களை மீண்டும் மீண்டும் படிக்க வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார். இணையதளத்தின் உதவியை மக்கள் நாடிக் கொண்டிருக்கும் அதேவேளையில், இது மிகவும் முக்கியமானது என்று அவர் விவரித்தார். நமது தகவலுக்கான முக்கிய ஆதாரமாக தொழில்நுட்பம் திகழ்கிறது என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை, ஆனால் புத்தகங்களுக்கும், புத்தகங்களை படிப்பதற்கும் இது மாற்று வழியல்ல என்று கூறினார். நமது மனதில் கருத்துரு உள்ள போது அதை ஆழமாக பதிவு செய்ய மூளை வேலை செய்து புதிய பரிமாணத்தை ஏற்படுத்துகிறது என்றும், புதிய ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளுக்கான வழிவகைகளை உருவாக்குகிறது என்றும் அவர் கூறினார். இவற்றில் நம்முடைய சிறந்த நண்பனாக புத்தகங்கள் திகழ்கின்றன என்று பிரதமர் தெரிவித்தார்.
குறிப்பாக, மாறிவரும் உலகச் சூழலில் புத்தகம் படிக்கும் பழக்கம், மிகவும் முக்கியமானது என்று தமது உரையின் நிறைவில் பிரதமர் வலியுறுத்தினார். புத்தகங்கள் நேரடியாகவோ அல்லது மின்னணு வகையிலோ இருந்தாலும் அதைப் படிக்க வேண்டும் என்று கூறினார். இது போன்ற நிகழ்வுகள், இளைஞர்களிடையே புத்தகம் குறித்த தேவையான ஈடுபாட்டை உருவாக்கும் என்றும் அவற்றின் முக்கியத்துவத்தை அவர்கள் புரிந்துகொள்ள உதவும் என்றும் தாம் நம்புவதாக பிரதமர் கூறினார்.
நன்றி!
வணக்கம்!
**************
My message for the book fair being held in Ahmedabad. https://t.co/Z62T4oevO5
— Narendra Modi (@narendramodi) September 8, 2022
जब मैं गुजरात में आप सबके बीच था, तब गुजरात ने भी ‘वांचे गुजरात’ अभियान शुरू किया था।
— PMO India (@PMOIndia) September 8, 2022
आज ‘कलम नो कार्निवल’ जैसे अभियान गुजरात के उस संकल्प को आगे बढ़ा रहे हैं: PM @narendramodi
पुस्तक और ग्रंथ, ये दोनों हमारी विद्या उपासना के मूल तत्व हैं।
— PMO India (@PMOIndia) September 8, 2022
गुजरात में पुस्तकालयों की तो बहुत पुरानी परंपरा रही है: PM @narendramodi
इस वर्ष ये पुस्तक मेला एक ऐसे समय में आयोजित हो रहा है जब देश अपनी आजादी का अमृत महोत्सव मना रहा है।
— PMO India (@PMOIndia) September 8, 2022
अमृत महोत्सव का एक आयाम ये भी है कि हम हमारी आजादी की लड़ाई के इतिहास को कैसे पुनर्जीवित करें: PM @narendramodi
आज इंटरनेट के जमाने में ये सोच हावी होती जा रही है कि जब जरूरत होगी तो इंटरनेट की मदद ले लेंगे।
— PMO India (@PMOIndia) September 8, 2022
तकनीक हमारे लिए निःसन्देह जानकारी का एक महत्वपूर्ण जरिया है, लेकिन वो किताबों को, किताबों के अध्ययन को रिप्लेस करने का तरीका नहीं है: PM @narendramodi