ஸ்ரீ குரு நானக் தேவ் அவர்களின் பிறந்தநாளில் மக்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஸ்ரீ குரு நானக் தேவ் அவர்களின் சிறப்புக்குரிய விழா நாளில் அவரது ஆன்மீக நெறிகளையும் மாட்சிமிகு சிந்தனைகளையும் திரு மோடி நினைவுகூர்ந்துள்ளார்.
டுவிட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது:
“ஸ்ரீ குரு நானக் தேவ் அவர்களின் சிறப்புக்குரிய விழா நாளில் அவரது ஆன்மீக நெறிகளையும் மாட்சிமிகு சிந்தனைகளையும் நான் நினைவுகூர்கிறேன். நீதி, கருணை, அனைவரையும் உள்ளடக்கிய சமூகம் என்ற அவரின் தொலைநோக்குப் பார்வை நமக்கு ஊக்கமளித்துள்ளது. மற்றவர்களுக்கு சேவை செய்வது பற்றிய ஸ்ரீ குரு நானக் தேவ் அவர்களின் வலியுறுத்தலும் மிகுந்த உத்வேகம் அளிப்பதாகும்.”
*******
On the special occasion of the Parkash Purab of Sri Guru Nanak Dev Ji, I recall his pious thoughts and noble ideals. His vision of a just, compassionate and inclusive society inspires us. Sri Guru Nanak Dev Ji’s emphasis on serving others is also very motivating.
— Narendra Modi (@narendramodi) November 19, 2021